பஞ்சபூதங்களை வெல்லும் சக்திவேல்

பஞ்சபூதங்களை வெல்லும் சக்திவேல்

“முருகா இந்த சக்திவேல், பஞ்சபூதங்களை வெல்லும் சக்தி படைத்தது. சகல உயிரினங்களையும் ஒன்று சேர தோற்கடிக்க வல்லது. பகைவரது வலிமைகளையும் அவர்கள் பெற்ற வரங்களையும் சிதைத்து உயிர்களை கவரும் ஆற்றல் கொண்டது. அனைத்து படைக்கலங்களையும் வெல்லும் ஒப்பற்ற சக்தி வாய்ந்தது”.

-கந்த புராணம்

திருமுருக வேல்கள்

அபய வேல், உக்கிர வேல், இலை வேல், எரி வேல், ஓங்கார வேல், கூர் வேல், கொடு வேல், சதுர் வேல், சின வேல், சுடர் வேல், சூர வேல், நல் வேல், நெடு வேல், படை வேல், புஷ்ப வேல், மந்திர வேல், முக்தி வேல், ருத்திர வேல், வஜ்ர வேல், வீர வேல், வளர் வேல், புனித வேல், துணை வேல், சீறும் வேல், சமர் வேல், கம்பீர வேல், எதிர் வேல், ஈர்க்கும் வேல், அன்பு வேல், நுண் வேல்.

போர் படைகளோடு முருகன்

சிவபெருமான் முருகனை அழைத்து ஒரு போர் படை அமைத்து தலைமை தாங்கி அசுரர்களை முற்றிலும் அழிக்கவும், தேவர்களை காக்கவும், கட்டளையிட்டார். முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் நவவீரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

– கந்த புராணம்.

திருமுருகனின் படைக்கலங்கள்

அங்குசம், வில், சூலம், சங்கம், கலப்பை, தாமரை, தண்டம், குலிசம், ஜபமாலை, கேடயம், வச்சிரம், கமண்டலம், கோழி (குக்குடம்), அம்பு, கொடி, சக்கரம், கதை, மணி, உளி (டங்கம்), கரும்புவில், உலக்கை, நீலோத் பலம், மலரம்பு (வல்லி), பாசம், கத்தி.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )