
எதிர்வரும் தசாப்தங்களில் இலங்கை, அணு மருத்துவத்தில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்
எதிர்வரும் தசாப்தங்களில் அணு மருத்துவத்தில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றலை இலங்கை கொண்டிருக்கும், மேலும் உள்நாட்டு கதிரியக்க மருந்து உற்பத்தி புற்றுநோய் நோயறிதலை மேம்படுத்தும் ஒரு முக்கிய தேசிய முயற்சியாக இருக்கும் என்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன கூறினார்.
இலங்கையின் முதல் சைக்ளோட்ரான் அடிப்படையிலான கதிரியக்க மருந்து உற்பத்தி வசதியின் ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு

