
‘IRIS Bushehr’ என்ற மற்றுமொரு ஈரானிய கப்பல் 204 பணியாளர்களுடன் பாதுகாப்பாக திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது
இலங்கை கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பலான ‘IRIS Bushehr’ இன் 204 பணியாளர்களை இலங்கை கடற்படை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அந்த கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த ஈரானிய கப்பலில் 208 பணியாளர்கள் இருப்பதாகக் கூறப்பட்டது.

