அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு                      10 ஹெலிகாப்டர்கள் நன்கொடை

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு 10 ஹெலிகாப்டர்கள் நன்கொடை

அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட
TH-57 Sea Ranger ரகத்தைச் சேர்ந்த 10 ஹெலிகாப்டர்கள்
தற்போது இலங்கையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மார்ச் 15, 2026 அன்று அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள போர்ட் மொபைல் துறைமுகத்திலிருந்து இவை புறப்பட்டுள்ளன.

இந்த ஹெலிகாப்டர்கள் எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவப் பதிப்பாகும். இவை இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இலங்கை விமானப்படையிடம் ஏற்கனவே உள்ள Bell 206 ரக ஹெலிகாப்டர்களுடன் இவை இணைக்கப்படுவதன் மூலம் பின்வரும் திறன்களை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது:

உயர்தர விமானிப் பயிற்சி (Advanced Pilot Training).

பேரிடர் கால துரித செயல்பாடுகள் (Disaster Response).

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் (Search and Rescue) திறன்களை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டர்கள் குறிப்பிடத்தக்க வகையில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாக தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நன்கொடையானது அமெரிக்கா மற்றும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தை உறுதிப்படுத்துவதுடன், பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான அர்ப்பணிப்பையும் பலப்படுத்துகிறது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் இலங்கை விமானப்படையின் குழுவொன்று அமெரிக்காவிற்குச் சென்று இந்த ஹெலிகாப்டர்களைப் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பெறுமதியான நன்கொடைக்காக இலங்கை தனது மனமார்ந்த நன்றிகளை அமெரிக்காவிற்குத் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )