இன்று வனவாசல ரயில் தண்டவாளத்திலிருந்து ஆணியை அகற்றி விபத்தை ஏற்படுத்திய நபரின் வீட்டில் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன

இன்று வனவாசல ரயில் தண்டவாளத்திலிருந்து ஆணியை அகற்றி விபத்தை ஏற்படுத்திய நபரின் வீட்டில் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன

இன்று காலை (16) களனி மற்றும் வனவாசல இரயில் நிலையங்களுக்கு இடையே இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, ரயில் தண்டவாளத்திலிருந்து ஆணியை அகற்றியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்து போலீசார் பல பொருட்களைக் கண்டெடுத்துள்ளனர்.

அதன்படி, இரயில் தண்டவாளங்களை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் 3 இரும்பு நெம்புகோல்கள் மற்றும் உபகரணங்களும் சந்தேக நபர் வசித்து வந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், வனவாசலவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெஹெலியகொட தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் மங்கள அஜித் உள்ளிட்ட குழுவினரால் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )