
தேசிய பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுங்கள்
பொது மக்களின் பாதுகாப்பு குறித்து நேற்றும் பேசினேன். அக்மீமன பூஸ்ஸ, தல்தென, மீகஹகிவுல, அகுனுகொலபலஸ்ஸ, வெலிவேரிய துப்பாக்கிச் சூடுச் சம்பவங்கள், மூதூரில் படுகொலை, மீண்டும் அம்பலாங்கொடையில் கொலை, கொழும்பு கிராண்ட்பாஸில் இரு கொலைகள் என பல சம்பங்கள் நடந்துள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் பெரும் பிரச்சினை காணப்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கும் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பு ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த பங்கர கொலைக் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட அவசர வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கி சூட்டு கொலையை ஏற்பாடு செய்த பெண்ணையும் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தினமும் நடக்கும் இந்த கொலைவெறி கலாசாரத்திற்கு முடிவே இல்லையா என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர், நாட்டு மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், தெளிவான தீர்வை வழங்கி அதனை நாட்டுக்கு முன்வைக்குமாறு தெரிவித்தார்.