
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்க தீர்மானம்
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க நடவடிக்கையெடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இதற்காக 5,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதி முதல் ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் உர மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் 56,700 மெற்றிக் தொன் உரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka