உயர் நீதிமன்றில் ஆஜரான மைத்திரி

உயர் நீதிமன்றில் ஆஜரான மைத்திரி

அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை ஒன்றிற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

உயர் நீதிமன்றம் இதற்கு முன்னர் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை மன்னித்து விடுதலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மனு தொடர்பாக உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )