கொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூடு , ஒருவர் பலி

கொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூடு , ஒருவர் பலி

கொட்டாவ, மலபல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இப்பகுதியிலுள்ள ஒரு விகாரைக்கு அருகில் நேற்றிரவு இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது .

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபருக்கு நெஞ்சுப்பகுதியில் குண்டு பாய்த்துள்ளதாகவும் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )