
நாட்டில் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இதுவரை 30 பேர் பலி !
இந்த ஆண்டில் இதுவரையான காலபகுதியில் இலங்கையின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 43 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவற்றில் 29 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவர்களாவர்.

