
CIDயில் இருந்து வெளியேறிய விமல் வீரவன்ச
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (15) வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து சற்று முன்னர் வெளியேறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில், அவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே இன்று (15) காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

