
செம்மணி மனிதப் புதைகுழி ; நீதி வேண்டி பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் பிரித்தானியாவின் லண்டன் நகரில் நேற்று (30) நடைபெற்றது.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களினால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான நேற்று (30) ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு பேரணி பிரித்தானியா – ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர்கத்தில் இருந்து ஆரம்பமாகி பிரித்தானிய பிரதமர் பணிமனை வரை சென்று பணிமனை முன்பாக தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
CATEGORIES Sri Lanka

