வெறிநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு

வெறிநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு

4 வயது சிறுவன் ஒருவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ள சம்பவம் தெலுங்கானாவில் பதிவாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் துங்கூரு கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் 2 மாதங்களுக்கு முன்பு, வெறிநாய் கடித்துள்ளது. ரேபிஸ் தடுப்பூசி போடாததால் குறித்த சிறுவனின் உடலில் ரேபிஸ் நோய்த்தொற்று படிப்படியாக பரவி, உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )