
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.
பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

