
இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வானிலை அவதான நிலையம் கேட்டுக் கொள்ளகிறது.
CATEGORIES Sri Lanka

