
47 இந்திய மீனவர்கள் கைது
தலைமன்னார், நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் ஐந்து இந்தியப் படகுகள் மற்றும் 47 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (09) கைது செய்துள்ளனர்.
அதன்படி கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள், மன்னார் மற்றும் காங்கேசன்துறை கடற்படைத் தளங்களுக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

