
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு
தெஹிவளையில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 34 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இரவு 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 34 வயது நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இரு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் குறித்து தெஹிவளை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

