
நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
அச்சுவெளி – தெற்கு கரத்தடி வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நேற்று (22) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புத்தூர் – ஆவரங்கல், பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அச்சுவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

