
பதுளையின் 68% நிலம் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது – NBRO ஆய்வறிக்கை
பதுளை மாவட்டத்தில் உள்ள மொத்த நிலத்தில் சுமார் 68% நிலச்சரிவு அபாயத்தில் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
பாதகமான வானிலை காலத்தில் பதுளை மாவட்டத்தில் 368 பெரிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்தார்.
இதன் விளைவாக, இதுவரை சுமார் 650 அதிக ஆபத்துள்ள வீட்டு அலகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
CATEGORIES Sri Lanka

