
எஃப்.ஏ சவால் கிண்ணத்திலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றம்
இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கத்தின் (எஃப்.ஏ) சவால் கிண்ணத் தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (11) தமது சொந்த மைதானத்தில் நடைபெற்ற விலகல் முறையிலான மூன்றாவது சுற்றுப் போட்டியில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியிடம் 1–2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததன் மூலம் யுனைட்டெட் தொடரிலிருந்து விலகியுள்ளது.
இந்தப் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக பெஞ்சமின் ஸெஸ்கோ ஒரு கோலைப் பெற்றார். அதேவேளை, பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணிக்காக பிரஜன் க்றூடா மற்றும் டனி வெல்பக் தலா ஒரு கோலைப் பதிவு செய்தனர்.
இந்த தோல்வியுடன், எஃப்.ஏ சவால் கிண்ணத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் பயணம் முடிவுக்கு
CATEGORIES Sports News

