
கொழும்பு-கண்டி வீதி மிரிஸ்வத்த நகர் பகுதியில் உயர் மின்னழுத்த மின் கம்பி வாகனம் மீது விழுந்ததில் பலர் காயம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்
கொழும்பு-கண்டி வீதியில் கம்பாஹா, மிரிஸ்வத்த நகர மையப் பகுதியில் உயர் மின்னழுத்த மின் கம்பி கம்பம் ஒன்று சரிந்து வீதியில் பயணித்த வாகனம் மீது விழுந்ததில், வாகனத்தில் பயணித்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால் கொழும்பு-கண்டி வீதி மிரிஸ்வத்த, பாலும்மஹார மற்றும் யக்கல போன்ற நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, மேலும் மிரிஸ்வத்த நகரத்திலிருந்து கண்டி நோக்கி செல்லும் ஒரு பாதையை மூட பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
CATEGORIES Sri Lanka

