
யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்காக, இன்று (22) யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
பொலிஸார் தகவல்களின் படி, அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை தாம் வழி மறித்ததால், வாகனத்தை நிறுத்திய பின்னரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதனால் வாகன சாரதியான சிறுவன் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில், சிலர் இதனை மற்றொரு பொலிஸாரின் திட்டமிட்ட படுகொலை எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பியுள்ளனர்.
பிரதீபன்

