
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு
கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (26) நிறைவடைகிறது.
பரீட்சை முடிந்த பின்னர் சில மாணவர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பரீட்சை மையங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விசேட கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதேவேளை, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தி, அமைதியான முறையில் பரீட்சை நிறைவைக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இவ்வாறான அவசர நிலைகளைத் தவிர்க்க முடியும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

