
“இலங்கை எப்போது வேண்டுமானாலும் உதவி கேட்கலாம்” ; ஈரானிய தூதர்
இலங்கை ஒரு நட்பு நாடு என்றும், அந்நாட்டிற்கு எந்த நேரத்திலும் உதவ ஈரான் தயாராக உள்ளது என்றும் ஈரானிய தூதர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இலங்கை கோரினால் எண்ணெய் அல்லது பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் ஈரான் தயாராக இருப்பதாக வலியுறுத்தினார்.
ஈரான் தனது நட்பு நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை மூடவில்லை என்றும், இலங்கை சிக்கலில் சிக்குவதை விரும்பவில்லை என்றும் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்தார்.
மேலும், இலங்கை ஈரானுக்கு மிகவும் மரியாதைக்குரிய நாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ‘ஐரிஸ் தேனா’வின் குழுவினரை மீட்க ஈரான் கோரிய உதவியை இலங்கை சமீபத்தில் முதலில் வழங்கியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும், ஈரானில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்குத் திரும்ப விரும்பினால், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க ஈரானிய அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

