
கொஹுவலைவில் வெளிநாட்டு பெண் கொலை
கொஹுவலை, களுபோவில பிரதேசத்திலுள்ள வீடொன்றின் அறைக்குள் வெளிநாட்டு பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதுடைய சீன நாட்டுப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெணின் முன்னாள் சீனக் காதலனாலேயே இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கைது செய்வதற்காக கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

