
எல்ல-வெல்லவாய பகுதியில் போக்குவரத்துக்கு தடை
எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் பாதையின் ஒருமருங்கு போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.
மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் விழுந்ததன் காரணமாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka