
ஏப்ரல் 21 வரை சூரிய சக்தி மின் படலங்களை அணைக்குமாறு கோரிக்கை .
தேசிய மின் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு ,சூரிய மின் படலங்கலளின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்ககும் பொருட்டு, 21 திகதி வரை தினமும் காலை முதல் பிற்பகல் 3.00 மணிவரை சூரிய சக்தி படலங்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அதன் உரிமையாளர்களை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.
புத்தாண்டுக் காலத்தில் நீண்ட விடுமுறை காரணமாக மின்சாரத் பயன்பாடு குறைந்துள்ளமை மற்றும் அதிகரித்த வெப்பம் காரணமாக அதிகளவிலான சூரிய சகதி உற்பத்தி போன்வற்றின் காரணமாக , தேசிய மின் கட்டமைப்பில் அசாதாரண அழுத்தம் ஏற்பட்டுள்ளதால், இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது .
இந்த அசாதாரண நிலை காரணமாக ஏற்படும் மிகச் சிறிய ஏற்ற இறக்க நிலையும் கூட, பகுதியளவு அல்லது நாடு முழுவதும் மின்தடை ஏற்படக் கூடிய நிலையை எட்டக்கூடும் என்றும் மின்சார சபை தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் தமது கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும்
சூரிய சகதி மின் படலங்களை குறித்த காலப்பகுதியில் தற்காலிகமாக அணைக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது .