
மே மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்
மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளின் மூலம் மே மாதத்துக்கான கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

