
முதன்முறையாக 3,147 தாதியர் நியமனங்கள்
3,147 தாதியருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கபட்டன
அலரி மாளிகை மண்டபத்தில் பிரதமரின் தலைமையில் நேற்று இந்த நிகழ்வு நடைபெற்றது.
நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தாதியர் சேவையில் 79 விசேட தர பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டன .
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதமர் ஹரிணி அமரசூரிய ,. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர்அனில் ஜாசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
CATEGORIES Sri Lanka

