
செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் இன்று
மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண பூஜை மற்றும் கும்பபூஜை பூஜை இடம் பெற்றதோடு, திங்கட்கிழமை பிற்பகல் விநாயகர் பானை எழுந்தருளல் மற்றும் நெல்லு குற்று பூசை இடம்பெற்றதை தொடர்ந்து திங்கட்கிழமை பின்னிரவு அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்து திருக்குளித்தி சடங்கு விமர்சையாக நடைபெற்றது.
பத்தினி தாய் காப்பிய நாயகிக்கு வைகாசியில் எடுக்கும் பெருவிழாவாக இச் சடங்கு உற்சவம் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
CATEGORIES Sri Lanka

