
100 டிரோன்களை ஏவி இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் !
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் மீது சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தற்போது இந்த அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இஸ்ரேல் இன்று அதிகாலை ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது
இந்தத் தாக்குதல்களை அவர்கள் “எதிரியை முடக்கும் தாக்குதல்கள்” (Enemy Crippling Attacks) என பெயரிட்டுள்ளனர்.

