
அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் , வலி நிவாரணிகள் , உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற பல அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் சமில் விஜேசிங்க, மத்திய மருந்தக களஞ்சியசாலையில் தற்போது சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகக் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் , ”தற்போது, இந்த மருந்துகள் மற்றும் சுகாதார அமைப்பில் பல மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கு பற்றாக்குறை உள்ளது.
மே மாதத்தில் கிடைத்த அதிகாரப்பூர்வ தரவு அறிக்கைகளின்படி, மத்திய மருந்தக களஞ்சியசாலையில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இருந்தது.
மருத்துவமனை அமைப்பில் இந்த மருந்துகளில் 50 க்கும் மேற்பட்டவற்றின் பற்றாக்குறை உள்ளது.
எங்களுக்குக் கிடைக்கும் தகவல்களின்படி, இந்த நிலைமை மோசமடைந்து வருகிறது.
மேலும், கடந்த பல மாதங்களாக புற்றுநோய் நோயாளிகளுக்கு மருந்தின் பெரும் பற்றாக்குறை இருப்பதாக நாங்கள் தற்போது தெரிவிக்கிறோம்.
எனவே, புற்றுநோய் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் சில வரம்புகள் உள்ளன,” என தெரிவித்துள்ளார்.

