
இந்தியாவுடன் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார்
இந்தியாவுடன் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் எப்போதும் தயாராக இருக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் ஷெபாஷ் ஷெரீப் தொலைபேசியில் உரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் , “ஜம்மு-காஷ்மீர், தண்ணீர் பிரச்சினை, வர்த்தகம் மற்றும் பயங்கரவாதம் உள்பட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது” என சவுதி இளவரசரிடம் தெரிவித்துள்ளார்.
CATEGORIES World News

