
ஹந்தான மலைத்தொடரில் காணாமல் போன 8 பேரும் மீட்பு
தலாத்ஒயா பொலிஸ் நிலையத்திற்க்கு உட்பட்ட ரட்டே முல்லே பிரதேசத்தில் வசிக்கும் மாணவர்கள் குழு ஒன்று நேற்று (28) காலையில் ஹந்தான பகுதிக்குச் சென்றிருந்தது.
ஹந்தான மலை உச்சிக்குச் சென்றிருந்த மாணவர்கள் மாலையில் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, மூடுபனி மற்றும் மழை தொடங்கியது, அந்த நேரத்தில் பாதை மாறியதால் 8 மாணவர்கள் காணாமல் போயிருந்தனர்.

பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இராணுவமும் பொலிஸாரும் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு அந்தக் குழுவைக் கண்டுபிடித்தனர்.
அதன் பிறகு, 8 மாணவர்களும் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினர்.
CATEGORIES Sri Lanka

