
அர்ச்சுனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) அனுமதியளித்தது.
இருப்பினும், மனுவில் கோரப்பட்டுள்ளபடி, அர்ச்சுனா பாராளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிப்பதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்கப் போவதில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த மனு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

