
4 வயதான இரட்டை குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்
4 வயதான இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த நிகழ்வு தாய்லாந்தில் பதிவாகியுள்ளது.
குடும்பத்தில் இரட்டையர்களாக பிறப்போர் ஆண் – பெண்ணாக இருந்தால் அவர்களை சகோதரன் – சகோதரியாக பார்க்காமல் திருமணம் செய்து வைப்பது தாய்லாந்தில் உள்ள புத்த மத வழக்கமாகும்.
ஆண் – பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்காவிட்டால் அது துரதிர்ஷ்டம் அந்நாட்டில் உள்ள புத்த மதத்தினர் நம்புகின்றனர். இதனால் குறித்த சிறுவர்களுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த குழந்தைகளின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

CATEGORIES World News

