
பிரான்சில் காட்டுத்தீ ; 13 பேர் காயம்
பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரான மார்ஷெல் நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து, பிரான்சின் பவுசஸ்-டு-ரோனி, வார் மற்றும் வாகுளூஸ் ஆகிய 3 தெற்கு பகுதி நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இந்த காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் காயம் அடைந்துள்ளனர் அவர்களில் 9 பேர் தீயணைப்பு வீரர்கள் ஆவர். இதனால், அந்த பகுதியில் தீப்பற்ற கூடிய பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர் தெளிக்கும் விமானங்களும் சம்பவ பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன.
CATEGORIES World News

