அஸ்வெசும மேன்முறையீட்டு கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது

அஸ்வெசும மேன்முறையீட்டு கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடையுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து தற்போது சுமார் 30,000 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.

இந்த மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினூடாக மீளாய்வு செய்யப்படும் என சபை கூறியுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )