
வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்
வெற்றிடமாகவுள்ள வனப்பாதுகாப்பு நாயகம் பதவிக்கு இலங்கை விஞ்ஞான சேவை விசேடதர அதிகாரியும், தற்போது வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் மேலதிக வனப்பாதுகாப்பு நாயகமாக (வனப்பாதுகாப்பு, நடவடிக்கைகள் மற்றும் முகாமைத்துவம்) பணிபுரிகின்ற டப்ளிவ்.டப்ளிவ்.எம்.பி.எஸ்.சீ. பாலமகும்புரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணிபுரிந்த ஈ.ஏ.பி.என். எதிரிசிங்க 2025.07.08ஆம் திகதி முதல் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

