சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட, சாய்ந்தமருது கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் நேற்று (22) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ஜே மதன் அவர்களின் தலைமை மற்றும் பங்களிப்புடன் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

f6

இந்த பரிசோதனையின் போது, மனித நலனுக்கு ஏற்புடையதல்லாத மற்றும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட உணவகங்கள் கண்டறியப்பட்டது.

f2

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், எதிர்காலத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளது.

f1

மேலும், சுட்டுத் துண்டுகளில் முறையான எச்சரிக்கை அறிவித்தல் இன்றி விற்பனை செய்யப்பட்ட குளிர்பான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, அதனைச் சார்ந்தும் சட்ட நடவடிக்கைகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )