
பிலியந்தலை பெண்ணொருவரின் 3 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கம்
பிலியந்தலை, போகுந்தரையைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் சொத்து மற்றும் காணி வாங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அடிப்படையில், பணமோசடி சட்டத்தின் கீழ் சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி கைது குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது சந்தேக நபர் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டதாகவும், அவரது மானாய் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிலியந்தலை பகுதியில் 3 கோடி மதிப்புள்ள நிலம், பணமோசடிச் சட்டத்தின் கீழ் கடந்த 9 ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்கப்பட்டு, ஹோமாகம உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்த பின்னர், சொத்து முடக்கப்படுவது தொடர்பான உத்தரவு 15.10.2025 வரை நீட்டிக்கப்பட்டது .
இதேவேளை சந்தேக நபர் ஜூலை 29 ஆம்திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ரூ. 50,000 ரொக்கப் பிணையிலும் தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

