
மயங்கிவிழுந்த பாடசாலை மாணவி உயிரிழப்பு
அநுராதபுரம் – கெக்கிராவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை முடிந்து வீடு திரும்புவதற்கு பாடசாலை பஸ்ஸிற்காக வீதியோரம் காத்திருந்த மாணவி திடீரென மயக்கமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மயக்கமடைந்த மாணவி பாடசாலை பஸ்ஸில் அளித்துச்செல்லப்பட்டு கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவி 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 11 வயதுடைய சிகிரியாவின் தல்கோட்டில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மாணவியின் மரணம் குறித்து தடயவியல் வைத்திய பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. டில் வசிப்பவர் ஆவார்.
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka

