
பொரளை துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு இளைஞர் பலி
பொரளை சிறிசர உயன மைதானத்தில் கடந்த 7 ஆம் திகதி இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு இளைஞர் உயிரிழந்தார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 23 வயதுடைய மற்றுமொரு இளைஞர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பொரளை சிறிசர உயன மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த இளைஞர்களை குறிவைத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயமடைந்த நிலையில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்தார். தற்போது மற்றுமொரு இளைஞர் உயிரிழந்தார்.
CATEGORIES Sri Lanka

