தரம் 5 புலமைப்பரிசில் மதிப்பீடுஇம்மாதம் 22 முதல் 27 வரை 6 நாட்களுக்குநடைபெறும்

தரம் 5 புலமைப்பரிசில் மதிப்பீடுஇம்மாதம் 22 முதல் 27 வரை 6 நாட்களுக்குநடைபெறும்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டிடற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இன்று நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்ட பின்னர், 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு 43 நிலையங்களில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில்
பரீட்சைக்கு 3 37951 மாணவர்கள் தோற்றினர்.
நாடளாவிய ரீதியில் 2787 நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது.

அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )