
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் மேம்பாட்டிற்காக 853 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் மேம்பாட்டிற்காக இந்த ஆண்டு (2025) அரசாங்கம் 853 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என்று மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன அண்மையில் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான இரத்தினபுரி மாவட்ட விசேட முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

