
மன்னாரில் பொலிஸ் அதிகாரிகள் ஓய்வெடுக்க புதிய விடுதி திறந்து வைப்பு
இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கான புதிய விடுமுறை விடுதி மன்னாரில் அதிகாரப்பூர்வமாக இன்று (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
‘சன்செட் ஹொலிடே ரெசர்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இவ் விடுதி, வன்கலே பொலிஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது. திறப்பு விழாவுக்கு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமை தாங்கினார்.
மன்னார் பிரதேச பொறியியல் பிரிவு அதிகாரிகளின் உதவியோடு பொலிஸார் ஓய்வெடுப்பதற்காகவே பிரத்யேகமாக இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் பல சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



CATEGORIES Sri Lanka

