
இலங்கை கோள்மண்டலத்தை நவீன மயப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை கோள்மண்டல கட்டடத் தொகுதியின் கட்டமைப்பு சரிவு மற்றும் தொழில்நுட்ப உட்பட்ட அமைப்புகளின் கட்டமைப்பு சிதைவு மற்றும் காலாவதியான நிலைமைகள் காணப்படுவதனால் அதன் தனித்துவமான கட்டடக்கலை அம்சங்களை பேணி, அதனை நவீன மயப்படுத்த வேண்டியதன் அவசியம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய திட்டமிடல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைவாக, முன்பொருத்தப்பட்ட கொங்கிறீட் தொழில்நுட்பம் தொடர்பாக விசேட அறிவு காணப்படும் முன்னணி அரச நிறுவனமான தேசிய பொறியியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்துடன் (NERD) சம்பந்தப்பட்ட பணிகளை ஒப்படைப்பதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் முன்வைத்த யோசனை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கோள்மண்டலம் 1965 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கண்காட்சியின் பிரதான வடிவமாக கலாநிதி ஏ என் எஸ் குலசிங்கவினால் தயாரிக்கப்பட்ட படைப்பாகக் கிடைக்கப்பெற்றது.

