
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில்!
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்று முதல் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது “வேலைக்கு ஏற்ற ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் என மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றாததால், இந்த சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்ததாக மின்சார சபை தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

