
இடிந்து விழுந்த மந்திரிமனையை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர்
இடிந்து விழுந்த மந்திரி மனையை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேற்று (17) பார்வையிட்டனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மந்திரி மனையானது தனிநபர் ஒருவருக்கு சொந்தமானது என்பதனால் , அதனை தொல்லியல் திணைக்களம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் எடுத்து புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

