
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள், மேற்கொண்டுள்ள போராட்டம் வேலைநிறுத்தமாக விரிவடையாது எனவும் இருப்பினும், சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் மின்சார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்திற்கு எதிராக, மின்சார தொழிற்சங்கங்கள் பல நாட்களாக இந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

